Sunday 3 May, 2009

ஒரு நல்ல கவிதை


ஒரு வேளை என்னுடைய மனைவியும் இப்படிதான் நினைப்பாளோ?, இதை படிக்கும் கல்யாணம் ஆனா பெண்களும் அவர்களுடைய பதிவை பதிவு செய்யுங்கள்

Monday 27 April, 2009

இன்றைய தேர்தல் காட்சி


மிக அழகாக சித்தரித்துஉள்ளார்கள், இந்த போடோவில் தனியாக , எதுவுமே செய்யாமல் இருக்கிறது யார் என்று எல்லோரும் அவங்களுக்கு தோன்றுவதை சொல்லவும்

Tuesday 21 April, 2009

Thursday 9 April, 2009

பாதியில் விட்டதை தொடர்கிறேன்

எல்லாமே துபாயில் நல்லா இருக்கு என்றும் சொல்ல முடியாது :
சில எனக்கு ஒத்து வராத விஷயங்களும் இருந்தன முதலில் சாப்பாடு எங்கே போனாலும் மாமிசம் தான், எனக்கோ மாமிசம் சாப்பிட்டு பழக்கம் இல்லை, விவேக் சொல்லுவது மாதிரி அவர்கள் ஊர்வன, ஓடுவன, பறபன, ஓடுறது போடுறது என்று எல்லாத்தையும் சாப்பிடுகிறார்கள் எனக்கு தான் பிடிக்கவில்லை.

இனிமேல் அங்கே நான் போன சில பொழுது போக்கு இடம் பற்றி சொல்கிறேன், desert சபாரி போனேன் அங்கே பெல்லி டான்ஸ் நல்லா இருந்தது வீடியோ வும் எடுத்தேன் அதை கீழே கொடுத்துள்ளேன் பார்த்து ரசிக்கவும.பெல்லி டான்ஸ் பார்க்க வந்த கூட்டத்தில் ஒரு தமிழ் குடும்பம் இருந்தது அப்பா, அம்மா மற்றும் அவர்களுடைய பொண்ணு, பாவம், மூணு பேரும், பொண்ணு இருக்காளே ன்னு அப்பா, அம்மா பெல்லி டான்ஸ்ஐ அவர்கள் ரெண்டு பேரும் அனுபவிக்க வில்லை, பொண்ணு, அப்பா மற்றும் அம்மா இருக்காங்களே என்று பார்க்க கூட வில்லை, பாவம்தான் மூணு பேரும். பெல்லி டான்ஸ் ஆடின பொண்ணு கொஞ்சம் குண்டு தான் நம்ம ஊரு ஜெயமாலினி மாதிரி இருந்தாள், அவ்வளவு தாராளமா :)



கொஞ்சம் போட்டோவும் எடுத்தேன் அதையும் கீழே கொடுத்துள்ளேன் பார்த்து விட்டு சொல்லவும்,
இந்த போட்டோ நாங்க தங்கி இருந்த ஹோட்டல் முகப்பு
எங்க கூட வந்த பயணிகளில் ஒருத்தி (அழகாக இருக்கா)

Desert சபாரி போகும் பொழுது எடுத்த படம்

துபாய் விமான நிலையம்

இது கண்ணன் (இவர் தான் என்னை துபாய் கூட்டிகிட்டு போனது) மற்றும் அவர் Boss
சொல்லவேண்டியது இல்லை இதுதான் நான்

துபாய் போயிட்டு வந்து விட்டேன்

துபாய் போயிட்டு எட்டாம் தேதி வந்து விட்டேன், போனதில் நான் கற்றது

1) நமது இந்திய பணத்தில் சம்பாதித்து விட்டு அங்கே சிலவு முடியாது ஏனென்றால் நமது பதினாறு ருபாய் அங்கே ஒரு ருபாய், அதினால் நம்மோட ஆயிரம் ருபாய் அங்கே போன உடன் பதினாறு திராம் ஆகி விட்டது, பதினாறு திராம் வச்சு என்ன பண்ண, வெறுமன எல்லாவற்றையும் பார்க்கதான் முடியும்,
2) அடுத்தது சுத்தம் , நம்ம ஊரு இப்படி என்னுடைய வாழ் நாளில் இப்படி ஆகுமா என்பது தெரியாது
3) நாட்டில் ஒரு போலீசை பார்க்க வில்லை, ஆனாலும் எல்லாரும் ஒழுங்காக வண்டி ஒட்டுகிறார்கள், ஒரு டிராபிக் சிக்னலை மீறி போவது இல்லை, இது நம்ம ஊரில் ஒரு நாளும் பார்க்கமுடியாது
4) நாட்டில் போராட்டம் என்பது இல்லவே இல்லை, இரவு எட்டு மணி வரை வேலை பார்கிறார்கள், அவரவர் சக்திக்கு ஏற்ப இரவை கழிகிறார்கள், சும்மா வெட்டியா கலாச்சாரம் போச்சு என்று கத்துவது இல்லை.
மற்ற விஷயங்கள் மற்றும் சிறிது போட்டோ பற்றி நாளை எழுதுகிறேன்

Friday 3 April, 2009

"DICTIONERY" யில் ஒரு புதிய அர்த்தம் நமது BANGALORE பெயரில்

எல்லோருக்கும் தெரியுமா நமது BANGALORE பெயரில் ஒரு புதிய அர்த்தம் DICTIONERY யில் போட்டு உள்ளார்கள்


ஒருவனை வேலை விட்டு தூக்கி விட்டார்கள் என்றால், அவன் "BANGALORED"ஆகி விட்டன் என்று சொல்லலாம்

"HAVE YOU BANGLORED BY YOUR COMPANY"

இதை நீங்கள் GOOGLE SEARCH யில் தேடி பாருங்கள்

வயது வந்த வர்களுக்கு மட்டும் உள்ள பதிவு

வயது வந்த வர்களுக்கு மட்டும் படிக்கவும் மற்றவர்கள் ஜோரா கை தட்டி விட்டு போங்கள்.......

!
!!
!!!
!!!!
!!!!!
!!!!!!
!!!!!!!
!!!!!!!!
!!!!!!!!!
!!!!!!!!!!
!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!!!!!!!!!!!
!!!!!!!!!!
!!!!!!!!!
!!!!!!!!
!!!!!!!
!!!!!!
!!!!!
!!!!
!!!
!!
!
தேர்தல் வந்தாச்சு வயதுக்கு வந்தவர்கள் உங்கள் வோட்டை போட மறக்காதீர்கள் ,